Wednesday, March 27, 2019

தொழில் நுட்பக் கல்வியில் சாதனை படைக்கும் மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரி

நெல்லை - நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் இடையே மூன்றடைப்பில் இருந்து 3 கி.மீ துாரத்தில் மருதகுளம் உள்ளது. இதன் கரைக்கு தெற்கே பரந்து விரிந்த மாயநேரி தோட்டத்தின் நடுவில் உயா்ந்து சுமார் 33 ஏக்கா் பரப்பளவில் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது நேஷனல் பொறியியல் கல்லூரி. இந்த கல்லுாரியானது மத்திய மற்றும் மாநில அரசின் இஸ்லாமிய சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரியாகும்.

திருவனந்தபுரம் மனாருல் ஹுதா டிரஸ்ட் சார்பில் நடைபெறும் இந்த பொறியியல் கல்லூரி கடந்த 7-7-2000ல் தமிழக ஆளுனராக பதவி வகித்த மேதகு நீதியரசா் பாத்திமா பீவி அவா்களால் தொடங்கி வைக்கப்பட்டது.அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் ஓப்புதலுடன் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பையும் ISO 9001-2008 தரச்சான்றிதழையும் பெற்றுள்ள இக்கல்லூரியில் குளிர்சாதன வசதி ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடனும் கூடிய விசாலமான கேலரி டைப் வகுப்பறைகளுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும் இங்கு 600க்கும் மேற்பட்ட அதிநவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் 20Mbps அதிவேக இன்டொ்நெட்  வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டா் லேப் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடு ஜர்னல்ஸ், இஜர்னல்ஸ், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டெல்னெட் உள்ளடக்கிய 20000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மிகப்பெரிய நுாலக வசதி உள்ளது. மேலும் மாணவ,  மாணவிகளின் வசதிக்காக தனியாக இன்டொ்நெட் வசதியுடன் கூடிய டிஜிடல் லைப்ரரியும் உள்ளது.

ஒவ்வொரு துறைகளுக்குரிய பரிசோதனை கூடங்கள், அதிநவீன உபகரணங்களுடன் தனித்தனியாக அமையப்பெற்றுள்ளது. மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக IEEE, IET, IETE, CSI, ISTE போன்ற அமைப்புகளும் உள்ளன. மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மல்டி பர்பஸ் விளையாட்டு மற்றும் கலை அரங்கம் அமையப்பெற்றுள்ளது இக்கல்லூரியின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.இக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி பிற துறைகளிலும் சிறந்து விளங்க ஏதுவாக பல்வேறு அசோசியேசன்கள் துவங்கப்பட்டு அதன் மூலம் கருத்தரங்கங்கள், வினாடி-வினா மற்றும் போட்டித்தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. 

இக்கல்லுாரியில் படிப்பிற்கு கொடுக்கிற அதே அளவிற்கு மாணவா்களுடைய ஓழுக்கத்திற்கும்,  பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லுாரி சோ்மன் ஹாஜி.டாக்டா்.எம்.கே.கமாலுத்தீன், மேனேஜிங் டைரக்டா் ஜனாப். சமீர் பின் கமால் வழிகாட்டுதலின் பேரில் கல்லுாரி முதல்வா் டாக்டா். அ.மு. ஷானவாஸ் ஆகியோரின் நிர்வாக திறமையில் பாட துறைகளுக்கேற்ற அனுபவமும் திறமையும் வாய்ந்த பேராசிரியா்கள் மற்றும் கல்லுாரி அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் இந்த பொறியியல் கல்லுாரி தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இது தவிர இக்கல்லுாரியில் மாணவ, மாணவிகள் கல்வி திறனை வளா்க்க மாதாந்திர திறனாய்வு தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி மட்டுமின்றி திறமை மிக்க பயிற்சியாளா்களால் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளை இக்கல்லுாரி உருவாக்கி வருகிறது. இது தவிரNSS, RRC, YRC மாணவ, மாணவியா்கள் மூலம் இரத்த தானம் போன்ற சமூகப் பணிகள்நடைபெற்று வருகின்றன.


பயிற்றுவிக்கப்படும் பாடப்ப்பிரிவுகள் : இக்கல்லுாரியில் பிஇ  - மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,  சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் ,  கம்ப்யூட்டா் சயின்ஸ்,  எலக்ட்ரீக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எம்இ கம்ப்யூட்டா் சயின்ஸ், கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன்,  அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
கேம்பஸ் இன்டர்வியூஇக்கல்லுாரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்த தகுதியுள்ள 90 சதவீதம் மாணவ,  மாணவியா்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மல்டி நேஷனல் நிறுவனங்களில் நேர்முக தோ்வின் மூலம் இறுதியாண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே வேலை வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். உலகப்புகழ் பெற்ற Wipro, CTS, TCS, IBM, ETA, Sutherland Global Services, Hindhuja Global Solutions, Fintek Solutions, Gesco, Precision Engineering, Repair & Return Technology, போன்றபல்வேறு முன்னனி நிறுவனங்களில் இக் கல்லுரியில் படித்து முடித்த மாணவ, மாணவியா்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனா்.

மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

source : dinakaran

நெல்லை, மார்ச் 27:  மருதகுளம் நேஷனல்  பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா, கல்லூரி தின விழா, மற்றும் பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கல்லூரி முதல்வர் முகம்மது பைசல் வரவேற்றார். நெல்லை மாவட்ட  விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு அலுவலர் மற்றும் விளையாட்டு விடுதி மேலாளர் குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பேசினர். மூத்த பத்திரிகையாளர் அசன் விழாவுக்கு தலைமை வகித்து பேசினார். விழா ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் முகம்மது அலி, அனைத்து துறை பேரா சிரியர்கள் கண்ணன், கவுதுல்ஆலம், ரவி கிருஷ்ணன், அனுலா பியூட்டி, பர்வதவர்த்தினி, அனைத்து துறை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

source : dinamani news
மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரியில் 15ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு,    கங்கைகொண்டான் தொழில் வளர்ச்சி மைய ஏடிசி டயர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின்  உபதலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரஸாண்ட் பல்கலைக்கழகப்  பதிவாளர் ஆசாத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 115 மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினார்.  
விழாவில் துறைத் தலைவர்கள் முகம்மது அலி,  கெளதுல் ஆலம், ரவி கிருஷ்ணன், அனுலா பியூட்டி,  பர்வதவர்த்தினி, கிருஷ்ணா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர்  நல்லமுகைதீன், அலுவலக கண்காணிப்பாளர் தமீம் அன்சர் ஆகியோர் செய்திருந்தனர். முதல்வர் (பொறுப்பு) கண்ணன் வரவேற்றார்.  முகம்மது அலி நன்றி கூறினார்.