நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ மாணவியர் நாங்குநேரி அரசு பள்ளிக்கு சென்று அரசு பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் மாணவ மாணவியர் இரண்டு பஸ்கள் ஏறி சென்று தேர்வு எழுதி வருவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாக ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரும் சமூக சேவகருமான நல்லாசிரியர் ஜான்கோவில்பிள்ளை அரசிற்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனை பரிசீலனை செய்த பள்ளி கல்வித் துறை வரும் கல்வி ஆண்டு முதல் மருதகுளம் ரோசலின்ட் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொது தேர்வு மையம் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்களும், மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் கலை,தொழில் பாட பிரிவுகளை துவக்கி அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment